Sunday 26 January 2014

நீங்கள்
நீல நிற மகிழுந்துக்கு
சொந்தக்காரராயிருக்கலாம்..

அதில் அடிபட்டு இறந்த
சிறுமிக்கு
நீல நிறம் பிடிக்காதோ என
நீங்கள் நினைக்கலாம்..

ஒரு வேளை பிடிக்காதெனினும்
அது 
அவள் குற்றமல்ல..

நீங்கள் உங்கள் கைகளை
சோப்பு போட்டு கழுவிவிட்டு
உங்கள் செல்ல நாய்க்கு
உணவு ஊட்டி விடலாம்..

எல்லா நாய்களுக்கும்
அந்த வாழ்வு 
லபிக்காது என்பதை நீங்கள்
அறியுங்கள்.
(மனிதர்களுக்கும்)

இறுக மூடப்பட்ட
உங்கள் 
குளிர்ப்பதனக் கார்களின் 
ஜன்னலுக்கு வெளியே
துரத்திவரும் நாய்கள்
வெறி கொண்டவையாக இல்லாமல்
பசி கொண்டவையாகக் கூட 
இருக்கலாம்..

கவனமாக வளர்க்கும்
உங்கள் குழந்தைகளை
ஒரு போதும்
அந்த 
இல்லாதவர்களின் தேசத்துக்குப்
போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்..

உங்கள்
நாய்களும், குழந்தைகளும்
உங்களுக்கு 
ரொம்ப ரொம்ப 
முக்கியம்..

No comments:

Post a Comment