Sunday 26 January 2014

எப்படியிருக்கும் ஒளி..

நீ
அண்ணாந்து பார்க்கும்போது
தென்படும்
செவ்வக செவ்வக
சன்னல் வெளிச்சங்கள் போல..

விரித்த
ஆள்காட்டி மற்றும் நடு
விரல்களுக்கிடைப்பட்ட கோணத்தைப் போல

விதிர்த்து சாபமிடும்
ஒரு 
பாலியல் தொழிலாளியின்
இரவைப் போல..

ஒரு கோடி ரூபாய் 
பணத்தைப் போல..

ஒரு வெற்றியைப் போல..

வெற்றிக்குப் பின் வரும்
ஆசுவாசத்தைப் போல..

எப்படியிருந்தாலும்
இன்றுவரை
உனக்குத் தெரியவில்லை
வெளிச்சம் 
எப்படியிருக்குமென்று..

முட்கள் குத்தும்
பாதையில் நீ
குதித்துக் குதித்துப் 
போகும்போது
எப்போதேனும் அது
தென்படக்கூடும்..

அப்போது

நீ 
முள்ளைப் பார்ப்பாயா
ஒளியைப் பார்ப்பாயா..?

No comments:

Post a Comment