Sunday 23 March 2014

சிறு வயதில்
பொம்மைகளை அள்ளி வந்தது போலவே
அள்ளி வருகிறாள் பிரச்சினைகளை
மகள்.
நெருங்குமுன் அப்பனின்
வாடல் முகம்
ஏதோ உணர்த்த
பொம்மைகளை எறிவது போலவே
பிரச்சினைகளை எறிந்துவிட்டு
ஓடி வந்து
தலைவருடுகிறாள்..
என்ன இருந்தாலும்
அவள் செல்லமகள்..
என்ன இருந்தாலும்
அவன்
செல்ல அப்பன்..

No comments:

Post a Comment