Sunday 23 March 2014

அழாதே என்று
கண்துடைத்து விடுகிறாள்
அக்கா, தங்கைக்கு
இருவரும் கொஞ்ச நேரம்
அருகிருக்கும் வீட்டு சன்னலில்
மலர்ந்திருந்த
இரும்புத் தாமரையைப் பார்க்கிறார்கள்..
போலாமா
என்கிறாள் அக்கா..
மலங்க விழிக்கிறாள்
தங்கை
போலாம் என்று
தங்கையைத் தூக்கிக் கொண்டு
நடக்கிறாள்
அக்கா..

No comments:

Post a Comment