Sunday 23 March 2014

பிள்ளைக்கறி
@@@@@
தெருக்களில் கூவிக் கூவி
விற்கிறான் சிறு வியாபாரி
அவனது கூடையில்
24 கனவுகள் இருக்கின்றன
வாங்குவோர் இல்லையெனினும்
தினந்தோறும் அவற்றை
துடைத்து முத்தமிட்டு
கூடைக்குள் வைக்கிறான் அவன்.
விலை எப்படி
என்று கேட்பவர்களிடம்
ஒரே ஒரு தடவை
இந்த கனவுகளை கையில் வைத்து
அவற்றின் களங்கமற்ற கண்களை
பார்த்து விலைகேளுங்கள் என்றே
கெஞ்சுகிறான் அவன்..
பேச நேரமில்லாது
அதிவர்ண விளக்குகள் மின்னும்
கடைகளில் சென்று
பொம்மைகள் வாங்குவோரிடம்
இவன் சொல்ல விரும்புவதெல்லாம்
ஒன்றே ஒன்றுதான்
இவையெல்லாம்
வெறும் கனவுகள் அல்ல
என் பிள்ளைகள்..

No comments:

Post a Comment