Sunday 23 March 2014

ஆம்
அன்பு தீர்ந்துதான் போகும் போல
ஒரு தீப்பெட்டியைப் போலவோ
ஒரு சிகரெட் பெட்டியைப் போலவோ
அல்லது
ஓர் ஊதுபத்திப் பாக்கெட்டைப் போலவோ..
உன் துயர் நிலைகளில்
உன்னை அள்ளியெடுத்து
முத்தமிட்டிருக்கக் கூடும்
நீ கைது செய்யப்பட்ட தருணத்தில்
போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியில் இருந்து
அழுதிருக்கக் கூடும் -
குறைந்தபட்சம் உனக்கு
மூன்று வேளை உணவை
வாங்கித் தந்திருக்கக்கூடும்
நீ பருக நினைத்த விஷத்தை
தட்டிப் பிடுங்கி
உன்னை
மரணத்திலிருந்து
காப்பாற்றியிருக்கவும் கூடும்..
அதற்குப் பிறகு என்ன..
துயரிலிருந்து வெளிப்பட்ட பிறகு
போலீஸ் ஸ்டேஷனில் இருநது
வெளியேறிய பிறகு
மரணத்திலிருந்து தப்பித்த பிறகு
பிறகென்ன நிகழும்
அன்பென்பது
பல நேரம்
பணத்தால் அளக்கப்படுவதும்தான்..

No comments:

Post a Comment