Sunday 23 March 2014

வாழ்வாதாரம் பறிபோனால் என்ன
தினந்தோறும் நாங்கள் பயன்படுத்தும்
குண்டும் குழியுமான
எங்கள் சாலையைப் புதுப்பித்தவனே
மீட்பன்..
எங்களனைவருக்கும்
விஷத்தைப் புகட்டி
இறுதிநாளைக் குறித்திருந்தால் என்ன
மரணம் வரைக்கும்
ஒவ்வொரு நாளும்
கொண்டாடும் வண்ணம்
மதுவைக் கையளித்தவனே
எங்கள் காவலன்
பக்தன் கோவிலுக்கு வரும்முன்
வழிப்பறிக்காரர்களை நியமித்து
பிரார்த்தனைகளைத்
திருடிக் கொள்பவனே
நம்மைப் பொறுத்தவரை
இறைவன்..
எல்லோரும் இன்புற்றிருங்கள்
கொண்டாடுங்கள்..

No comments:

Post a Comment