Sunday 23 March 2014

மழைநீரை சுமந்துகொண்டோடுகிறது
சாலையோரக் கால்வாய்
கூடவே சில புன்னகைகளை
வெகுகாலம் முன்பு
நனைந்தூறிய சில காத்திருப்புகளை
ஒரு
மரத்தடி தொடுகைகளை
சில கையசைப்புகளை
இப்போது கூசவைக்கும்
சில வசவுகளை..
நீ பெண்
நான் ஆண்
பாவம்
மழைக்கு என்ன தெரியும்..

No comments:

Post a Comment