Sunday 23 March 2014

பெருஞ்சுமையுடையோன் போல
தள்ளாடி வருபவன்
சுமந்து வருவது
ஒரேயொரு ஈர எச்சில் முத்தம்..
இருக்கிற வேலையை எல்லாம்
எறிந்துவிட்டு
அவனிடம் கிழவி பெறுவதென்னமோ
ஒரேயொரு ஈர முத்தம்
நீ யாரை முத்தமிட்டாயென
அவனிடம் கேட்டால்
அப்பத்தா என்றே
தெளிவாய் சொல்லுவான்
ஒரேயொரு முத்தத்துக்காக
அவமானங்களைப்
புறந்தள்ளிய கிழவியிடம்
கேட்டால்
அவனுக்கு
அவங்க தாத்தா பேரு
என்றே சொல்வாள்..
முத்தங்கள் தின்று வாழ்பவள்

No comments:

Post a Comment