Sunday 23 March 2014

சுமக்க முடியாமல் சுமந்துதான்
அந்த சொல்லை
வீட்டுக்கு கொணர்ந்தேன்..
தரையில் கிடந்தால்
அப்படியே கிடக்கும்..
முதுகில் சுமந்தால்
நடு முதுகில் நெளிந்து அருவெறுப்பூட்டும்
அத்தனை சிரமங்களைக் கடந்துதான்
இது என் வீடு சேர்ந்திருக்கிறது.
நான் விரும்பியதல்ல இது..
என்னைப் பற்றி
மற்றவர்கள் நினைக்க விரும்பியதுமல்ல..
நான் மறுக்க நினைத்ததையும்
மறக்க நினைத்ததையும்
ஒன்றாக்கி குற்றச்சாட்டாக சுமந்திருக்கிறது
இந்த ஒற்றைச் சொல்..
விட்டு வந்திருந்தாலும்
என்னை ஏலத்தில் விட்டிருக்கும்
வீட்டில் வைக்கும்போதில்
அமையாது துர்நாற்றத்தை
பரப்புகிறது அது..
சொற்களைச் சுமக்கச் சபிக்கப்பட்டவர்கள்
தம் சுமையை அறிவார்கள்..
சொற்களை சுமக்கச் சபிப்பவர்கள்
சொற்களாலேயே சாகக் கடவது..

No comments:

Post a Comment