Sunday 23 March 2014

இரு சக்கர வாகனத்தின்
பொருள் வைப்பிடத்தில்
எப்போதும் இருக்கும்
பிஸ்கெட்டுகள் காணாது போய்விட்டன..
பிரியமுடன் அழைப்புமணியடிக்கும்
அலைபேசியை
யோசித்தே எடுக்கிறான் அவன்..
வேப்பமரத்தடியில்
நாற்றம் மறந்து
உரையாடிய உரையாடல்கள்
கனவுகளுக்குள்
சென்று பதுங்கிக் கொண்டன..
அட ஆமாம்..
மறுபடியும்
கோடைக்காலம் வந்துவிட்டது..

No comments:

Post a Comment