Thursday 14 November 2013

பிரிந்தவர்கள் வாழும்
பெருங்கொண்ட மண்ணில்தான்
வாழ்கிறோம் நாம்
பெரும் பிரியங்களுடன்..

அணைப்பின்போது
முதுகிலிறங்கும் கத்திகளை
அவ்வப்போது
பிடுங்கி 
எறிந்து கொண்டுதான் இருக்கிறோம்
பிரியங்களோடே..

வெளியெங்கும்
விரவிக் கிடக்கும்
அம்மலர்களின் வாசங்களை
சிலாகித்துப் பேசியபடியே
அச் செடிகளைத்
தேடியபடி இருக்கிறோம்
கொல்வதற்காக..

பிரியமெனும் பெரு நதி
அல்லது
பிரியமெனும் பெரும்பாம்பு
நம்மெல்லோருக்கும்
நடுவிலோடி
நம்மை
நடுக்கமுறச் செய்தபடியே
இருக்கிறது..

இப்போதும்
இக்கணத்திலும்
இதை எழுதும்போதும்
என்னிடம் நீ சொல்கிறாய் :
ஐ லவ் யு..

No comments:

Post a Comment