Thursday 14 November 2013

இன்று தமிழ் இந்துவிலும் தினமலத்திலும் வந்த இரு செய்திகள் என் கவனததைப் பெற்றன.. ஒன்று என் கவனத்தையும் மற்றது என் கண்டனத்தையும்..

இந்துவில் வந்தது :

ஏகே 47 துப்பாக்கியை கண்டுபிடித்த மிகையீல் கலாஷ்னிகோவ் பிறந்த நாள் இன்று.. கவிஞராக விரும்பிய அவர் ஒரு மெக்கானிக்காக வேலை செய்தார். செம்படையில் சேர்ந்து போரிலும் பங்குபெற்ற அவர்தான் உலகின் கொடூரமான ஆயுதமான ஏகே 47 - ஐ கண்டுபிடித்தார். அவர் 150 க்கும் மேற்பட்ட ஆயுதங்களை கண்டு பிடித்திருக்கும் அவர் ஆறு கவிதை நூல்களையும் வெளியிட்டிருக்கிறார்..

அதில் ஏகே 47 மட்டுமே பெரும் புகழ் பெற்றுள்ளது..

தினமலத்தில் வந்தது:
டெங்கு கொசுக்களை ஒழிக்க தினமலம் விநோதமான ஐடியாவை கொடுத்துள்ளது. எங்கெங்கு எல்லாம் நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறதோ அங்கெல்லாம் ஆயில் பந்துகளை அந்த நீரில் போடச் சொல்லி ஐடியா கொடுக்கிறது. அவற்றை எப்படி தயார் செய்ய வேண்டும் என்று தெரியுமா.. ஒரு துணிக்குள் மரத்தூளை அடைத்து கிரிக்கெட் பால் அளவுள்ள பந்துகளாக செய்து கொள்ள வேண்டும். அதை மெக்கானிக் கடைகளில் கிடைக்கும் வேஸ்ட் எஞ்சின் ஆயிலில் ஒரு நாள் முழுக்கஊறப் போட வேண்டும்.

பந்துகளில் ஆயில் நன்றாக ஊறிய பின்பு எங்கெல்லாம் தண்ணீர் தேங்கி இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த ஆயில் பந்துகளைப் போட வேண்டுமாம்.. நிலத்தையும் நிலத்தடி நீரையும் பாழடிக்க இதைவிட எளிமையான வழி எதுவும் இல்லை.. உலக நாடுகளில் இந்த ஆயில் வேஸ்ட்டுகள் நிலத்தை பாழாக்காமல் இருக்க மில்லியன் கணக்கான டாலர்கள் செலவு செய்து ஆராய்ச்சிகள் செய்தபடி இருக்க தினமலம் கொடுக்கும் ஐடியாவைப் பாருங்கள். ஆயில் பால்களால் கொசுவை அழிக்க முடியாவிட்டால அடுத்து ஆசிட் ஊற்றச் சொல்லுவார்கள் போல.. தேவையற்ற தண்ணீர் தேங்குவதை தடுத்தாலே ஒழியக் கூடிய பிரச்சினைக்கு தண்ணீரை தேங்க வைத்து நிலத்தைக் கெடுக்கும் ஐடியாவை கொடுக்க எப்புடி மனம் வருகிறதென்றே தெரியவில்லை..

இனம் நிலம் இரண்டுமே இவர்களுக்கு ஆகாதுதான் போல..

No comments:

Post a Comment