Thursday 14 November 2013

ஒரு நிறைவான பயணம். நிறைவான நண்பர்களின் சந்திப்பு. இன்னும் வெகுநாட்களுக்கு இனிய கனமாக மனதாழத்தில் கனத்துக் கொண்டிருக்கப் போகிற ஒரு பிறந்தநாள்.. நெஞ்செஞ்கும் ஒரு பெட்டகத்தில் நிறைய புன்னகைகளையும் அடைக்க முடியாத அன்பையும் திணறத் திணற வாழ்த்துகளையும் சுமந்துதான் வீடு அடைந்திருக்கிறேன். எத்தனை பிரியங்கள்.. எத்தனை வாழ்த்துகள்.. எத்தனை நண்பர்கள்.. எண்ண முடியவில்லை. பிறந்தநாளில் இருந்து ஒவ்வொரு நண்பருக்கும் தனித்தனியாக நன்றி செய்திகளை அனுப்பி அனுப்பி இன்றுதான் கிட்டத்தட்ட அனைவருக்கும் நன்றி சொல்லி முடித்தேன். நிச்சயம் நிறைய பேருக்கு நன்றி சொல்லாமல் விட்டிருக்கக் கூடும். அந்த நண்பர்களுக்கு இந்த இடுகையின் மூலம் என் மனம் நிறைந்திருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

யாரும் கவனிக்காமல்
உதிர்ந்து கிடக்கும்
பூ ஒன்றை
மழை நீர் சுமந்து செல்கிறது
தன் தலைமேல்..

நீங்கள் என் மழை நண்பர்களே..

அனைவருக்கும் பிரியங்கள்..

21.102013 ன் நினைவில்..

No comments:

Post a Comment