Thursday 14 November 2013

நாலு..

டூர் புறப்படும்
டாக்சியின் நான்கு கால்களிலும்
நான்கு எலுமிச்சம்பழங்களை 
வை..

மிஞ்சும்
ஒரு பழத்தை
பிய்த்து 
சரியாக
நாலு திசைகளிலும் வீசு..

நாலு வேதமும்
சூத்திரனை
சூத்திரனென்றே சொல்கின்றன..

நாலும் ரெண்டும்
சொல்லுக்குறுதி என்றால்
தமிழ் தெரியாதவனின்
சொல்லெல்லாம் குருதி..

உண்ணக் கொடுக்க
ஏதுமில்லாதபோது
வீட்டிலிருக்கும் அவலை
எடுத்து மீனாள் நீட்டுகையில்
உண்ணத் தெரியாமல்
கையை கடித்து அவல் பொறுக்கும்
சாயா மற்றும் அவளது குஞ்சு
இருவருக்கும் சேர்த்து
நாலே கால்..

எண்கள் தெரியாவிட்டாலும்
ராகுவுக்கு நாலுதான்..

ஒரு வேளை
மேலும் நான்கு நாள்
பொறுத்திருந்தால்
அந்தப் பிரிவு
நிகழாமல் இருந்திருக்கக் கூடும்..

உங்களுக்கு நாலைப் பிடிக்குமா..?

எனக்கோ எனில்
நாலு என்பது மற்றொரு எண்ணே..

No comments:

Post a Comment