Sunday 23 March 2014

நூல் பிரிந்து தொங்கும்
அரைப்பாவாடையும்
துளை மாறி பட்டன் போட்ட
ஆம்பிளைச் சட்டையும்
போட்டவள்தான்
அக்கா குட்டி
அழும் ஆடையில்லாத
தம்பி குட்டிக்கு
கண்துடைத்துவிட்டு
அவளது பிஸ்கெட்டில்
பாதியை பிய்த்துத் தருகிறாள்
கூடவே தன் புன்னகையையும்..

3 comments:

  1. அக்கா குட்டியும்
    உடைந்த பிஸ்கட்டும்
    மனதில்
    ஒட்டிக்கொண்டு விட்டது..

    ReplyDelete
  2. பிஸ்கட்டை விடவும் ருசியாக இருந்தது கடைசி வரி. நன்றி.

    ReplyDelete
  3. வணக்கம்.வலைப்பதிவர் திருவிழாவிற்கு விழாக்குழு சார்பாக உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.நன்றி.

    ReplyDelete