Sunday, 23 March 2014

அணைப்பெல்லைக்குள் வராததுவும்
நம் சொற்களை மதிக்காததுவும்
வாழ்வியக்கத்தின் ஒழுங்குகளுக்குள்
ஆட்பதாததுவும்
நம் உறக்கங்களைக் காவு கேட்பதுவும்
நீங்கள் உறங்கப் போகையில்
உடல்நலமில்லாமல் போவதுவும்
அய்யோ போதுமென நீங்கள்
கையெடுத்துக் கும்புடுகையில்
கூப்பிய கரங்களை
பொக்கைவாயால் கடிக்க விளைவதுவும்
நாம் அழவிளையும்போது சிரிப்பதுவும்
சிரிக்க விளையும்போது பதற்றம் கொள்ள
வைப்பதுவும்
எப்போதும் நம்மை 
நெஞ்சை நிமிர்த்தி
உச்சங்கொள்ள வைப்பதுவுமான
ஒன்றுக்குப் பெயர்தான்
பெற்ற பிள்ளை..

No comments:

Post a Comment