Sunday, 23 March 2014

நீங்கள் ஒரு
சன்னலைக் கடக்கிறீர்கள்
- பிண வாசம் வீசுகிறது..
தேடித் தேடிஒரு
ஆறுதல் சொல்லைக்
கண்டடைகிறீர்கள்
அது
மரண தருவாயிலிருக்கிறது..
துயரங்களை
உதிர்த்துவிட
ஓர் ஆற்றினைத் தேடுகிறீர்கள்
அது
உங்களுக்குள்தான் இருக்கிறது..
உணவு தேடி
நீங்கள்
புகும் வனத்தின்
முதல் பரிமாறலே
ஒரு தட்டு நிறைய புன்னகைதான்..
அந்த உயரத்துக்கு
மண்டியிட்டு நீங்கள்
அணைத்தீர்கள் என்றால்
பிதா, சுதன், பரிசுத்த ஆவி
இவையனைத்தையும் விட
நீங்கள்
தூய்மையானவர்தான் சகோதரா..

No comments:

Post a Comment