Thursday 14 November 2013

ஒரு பொழுதில்
நான் தந்த புன்னகைகளை
என்றென்றும்
நான் திருப்பிக் கோரப் போவதில்லை..

கல்லில் பதிந்துவிட்ட
சில பனித்துளிகள் போதும்
என் பசிக்கு..

என்னை அழைத்துச் செல்லும் பாதைகள்
என்றென்றும் உறங்குவதில்லை..

உனக்குத் தெரியாத
சில கொலுசொலிகளும்
அறியாமல்
நீ சிந்திச் சென்ற முத்தங்களும்
உன் சுருக்குப் பையிலிருந்து
நழுவி விழுந்த வருடல்களும்
என்னிடமிருக்கின்றன..

உனக்கு நம்பிக்கை இல்லையெனினும்
எனக்குத் தெரியும்
நான் வாழ்ந்துவிடுவேனென்று..

No comments:

Post a Comment