Thursday 14 November 2013

அமுதூட்டிச் சலித்த
முலைகள்
வற்றியிருக்கக் கூடும்..

எத்தனை பிள்ளைகளின்
பசியாற்றியிருப்பாள் அவள்..

ஓட்டம் குறைந்தாலும்
ஊற்றால் நீரூட்டும்
வைகை போல்
எந்நேரமும்
சாம்பிய முலை மறைத்து
சுட்டுச் சுட் டு
பசியாற இட்டிலி
சுட்டுத் தந்தபடி
இருக்கிறாள்
இந்த வைகையின் தங்கை..

உன் தளர்ந்த கைகளை
நீட்டி நீட்டி
எங்களுக்கெல்லாம்
தந்து பசியாற்றும்
இட்டிலியெல்லாம்
உன்
முலைவடிந்த
பால்த்துளிதான் அம்மா..

No comments:

Post a Comment