Friday 17 January 2014

கண்டக்டர் ஜக்கைய பாவாவின்
இரண்டாம் மனைவியாக
வாய்க்கப் பெறாத துக்கத்தில்
வயிற்றுப் பிள்ளைக் காரியாக
செத்துப போன அமுதாக்கா
மல்லிகாவின் மேல் வந்து கேட்கிறாள்..

கோழி கொடு..
சுருட்டு கொடு..
சூடியும் தீராத
மல்லிகைப் பூ கொடு..
சிவப்பு கலர்
புடவை கொடு..
என்றென்றும் இனிமேல்
ஆசை வைத்த பெண்களை
ஏமாற்றாமல் தாலி கொடு
என்றெல்லாம்..

அமுதாக்கா மேல்
இரக்கப்படும் யாதொருவருக்கும்
வெறுங்கழுத்து மல்லிகாவின் மேல்
இரக்கம் வராதது
ஆச்சரியமே..

1 comment:

  1. ஜோர் டைரக்டர்

    மறைந்திருக்கும் கதை கவியின் கண்களுக்கு தெரிந்த வெறும் கழுத்து

    ஆகா நந்தன் !

    ReplyDelete