மழைநீரை சுமந்துகொண்டோடுகிறது
சாலையோரக் கால்வாய்
கூடவே சில புன்னகைகளை
வெகுகாலம் முன்பு
நனைந்தூறிய சில காத்திருப்புகளை
ஒரு
மரத்தடி தொடுகைகளை
சில கையசைப்புகளை
இப்போது கூசவைக்கும்
சில வசவுகளை..
சாலையோரக் கால்வாய்
கூடவே சில புன்னகைகளை
வெகுகாலம் முன்பு
நனைந்தூறிய சில காத்திருப்புகளை
ஒரு
மரத்தடி தொடுகைகளை
சில கையசைப்புகளை
இப்போது கூசவைக்கும்
சில வசவுகளை..
நீ பெண்
நான் ஆண்
பாவம்
மழைக்கு என்ன தெரியும்..
நான் ஆண்
பாவம்
மழைக்கு என்ன தெரியும்..
No comments:
Post a Comment